bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 27 மே, 2017

தவ வாழ்வு

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
ஆனால் அவை நேர்மறை எண்ணங்களுக்கு பதிலாக எதிர் மறை பலன்களையே தருகிறது.
 தனது தொகுதி மக்களை காண, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் சென்றுள்ளார். அதற்கு ஒருநாள் முன்னதாக அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள்  தலித் மக்களுக்கு சோப்பு, ஷாம்பு, செண்ட் உள்ளிட்டவை கொடுத்தனர்.
அக்காலையில்  அனைவரூம் கண்டிப்பாக பல்லை விளக்கி சோப்பு,ஷாம்பு போட்டு சுத்தமாக குளித்து, மேலே சென்ட் தெளித்து தயாராக இருக்குமாறும்,முதல்வர் வந்து செல்லும்வரை சுத்தபத்தமாக இருக்கவும் ஆணையிட்டுள்ளனர்.

 அப்பகுதியில் புதிதாக தெரு விளக்கு, சாலை, கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முதல்வர் வந்து சென்றபின்னரே கழிப்பறைகளை உபயோகிக்க வேண்டும் என்றும் ஆணை.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதிகளால் உயிரிழந்த  ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த கிராம் ஒன்றுக்கு சென்றபோது அக்கிராமத்திற்கு புதிதாக சாலை ,தெரு விளக்குகள் அமைத்ததும் துக்க வீட்டில் புதிதாக பெயிண்ட் அடித்து குளிர் சாதனம் பொருத்தியதுடன் சாலையில் இருந்து வீடுவரை இரத்தின கம்பளம் விரித்ததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதைவிட அசிங்கம் முதலவர் யோகி காரில் ஏறியவுடனேயே குளிர்சாதனம்,சாலை வசதிகள் அகற்றப்படடதுதான் .
சாமியாராக இருந்த முதல்வர் யோகிக்கு இப்படிப்பட்ட ஆடம்பர ,அலங்கார வசதிகள் அதிகாரிகள் செய்துதருவது அவற்றின் உத்திரவுப்படிதான் என்பது மாநிலம் முழுக்க அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இங்கு தமிழ் நாட்டிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படித்தான் ஆடம்பர,அலங்கார வசதிகள் அவர் செல்லும் இடங்கள்தோறும் செய்யப்பட்டன.
இருவருக்கும் உள்ள ஒற்றுமை "இருவருமே தவ வாழ்வு வாழ்ந்துதான்."
அம்மாவின் தவ வாழ்வு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேன் - சீரக தண்ணீர்
தினமும், தேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

சமையலறையில் உள்ள பொருட்கள், பெரும்பாலும் நம் உடல்நலனை பாதுகாக்கப் பயன்படுகின்றன. அவற்றை கண்காணிக்காமல், நாம் அடிக்கடி மருத்துவர்களிடம் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.


மருத்துவரிடம் செல்வதை குறைத்து, சமையலறையில் உள்ள பொருட்களின் உண்மை பயனை தெரிந்துகொண்டு, உபயோகித்து நலவாழ்வு வாழ முயற்சிப்போம்.

ரத்த அழுத்தம், மலச்சிக்கல் உள்ளிட்ட நவீன கால நோய்களுக்கு, நல்ல மருந்தாக, தேன் கலந்த சீரக தண்ணீர் உள்ளது. 

செய்முறை:
சீரகம், தேன், தண்ணீர்.

தண்ணீரை கொதிக்க வைத்து, சீரகத்தை போட்டு, அதனை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். பின்னர், தேன் கலந்தால், இந்த பானம் தயார்.

பயன்கள்:
1) சீரக பானத்தை தினசரி குடிப்பதால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, ரத்தம் சுத்தமாகும். ரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.

2) இதேபோன்று, செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.

3) மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.

4) சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.

5) தேன் கலந்த சீரக தண்ணீர், ரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.

6) சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.

7) தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...