bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 22 ஏப்ரல், 2017

போதை அடிமைகளை

போதை அடிமைகளை குறிவைக்கும் தீவிரவாத குழுக்கள்

ஆல்­பர்ட் ஜான்­சன் (27) கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்டு இருந்த போது, அவ­ரது தகப்­ப­னார், யாருமே நினைத்­துக் கூட பார்க்க முடி­யாத காரி­யத்­தைச் செய்­தார். 
சேனா­பதி மாவட்­டத்­தில் உள்ள ஒரு பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய ஆல்­பர்ட் ஜான்­ச­னின் தகப்­ப­னார், அவ­ரது மகனை (ஆல்­பர்ட் ஜான்­சனை) 2011ல் போலீ­சில் பிடித்­துக் கொடுத்­தார். மாணவ பரு­வத்­தி­லேயே ஆல்­பர்ட் ஜான்­சன் போதைக்கு அடி­மை­யா­னார். 
இந்த பழக்­கத்­தில் இருந்து விடு­பட வைக்க செய்த முயற்சி தோற்­றுப் போன பிறகு, வேறு வழி­யில்­லா­மல் போலீ­சார் வசம் ஒப்­ப­டைத்­தார்.
கிழக்கு இம்­பா­லில் உள்ள போதை புனர்­வாழ்வு மையத்­தில் சிகிச்சை பெற்று வரும் ஆல்­பர்ட் ஜான்­சன் கூறு­கை­யில், “தின­சரி வேலை முடிந்து வந்­த­வு­டன் அவர் என்னை அடிப்­பார். எனது போதை பழக்­கம், அவ­ருக்கு கௌரவ குறைச்­ச­லாக இருப்­ப­தாக நினைத்­தார். 
மற்ற தகப்­ப­னார்­களை போலவே, அவ­ரும் சிறை­யில் அடைத்­தால், எனது போதை பழக்­கம் நீங்கி விடும் என்று கரு­தி­னார் என்று நினைவு கூறு­கின்­றார் ஆல்­பர்ட் ஜான்­சன். மணிப்­பூர் மாநி­லத்­தில் போதை மருந்­துக்கு அடி­மை­யா­ன­வர்­கள் ஹெச்.ஐ.வி.,நோயால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதே போல் தனது மக­னும் ஹெச்.ஐ.வி., நோயால் பாதிக்­கப்­பட்டு விடு­வான் என்று அவ­ரது தகப்ப­னார் பயந்து போயுள்­ளார்.
ஆல்­பர்ட் ஜான்­சன் தகப்­ப­னார் கரு­தி­யது போல் சிறைச்­சாலை குற்­ற­வா­ளி­களை திருத்­தும் இட­மாக இல்லை. 
ஆல்­பர்ட் ஜான்­சன் சிறை­யில் தீவி­ர­வா­தி­யு­டன் அடைக்­கப்­பட்­டுள்­ளார். இவர் 2012ல் ஜாமீ­னில் வெளியே வந்த பிறகு, மணிப்­பூ­ரில் உள்ள மிக ஆபத்­தான தீவி­ர­வா­தி­கள் குழு­வில் ஐக்­கி­ய­மா­னார். அந்த தீவி­ர­வாத குழு­வின் பெயர் ‘கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை’ [People’s  Revolutionary Party of Kangleipak- – PREPAK].  இந்த தீவி­ர­வாத குழு­வில் ஆல்­பர்ட் ஜான்­சன் கற்­றுக் கொண்ட முதல் பாடம் மிரட்­டல் கடி­தம் எழு­து­வது. 
“நான் வர்த்­த­கர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு மிரட்டி பணம் கேட்டு கடி­தம் எழு­து­வேன். இதை கூரி­யர் மூலம் அனுப்­பு­வோம். மிரட்­ட­லுக்கு பயந்து பணம் கொடுத்­தால், அதில் 10 சத­வி­கி­தம் எனக்கு கொடுப்­பார்­கள்” என்று கூறு­கின்­றார் ஆல்­பர்ட் ஜான்­சன். இவ்­வாறு கிடைக்­கும் பணத்தை போதை மருந்து வாங்க பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்.
“சிறை­யில் அடைத்­தால் போதைக்கு அடி­மை­யா­ன­வர்­கள் திருந்தி விடு­வார்­கள் என்ற பலர் நினைக்­கின்­ற­னர். இது மிக தவ­றான எண்­ணம். 
போதை பழக்­கத்­தில் இருந்து விடு­பட பல பெற்­றோர், அவர்­க­ளது பிள்­ளை­களை சிறை­யில் அடைக்­கின்­ற­னர். இவ்­வாறு சிறை­யில் அடைக்­கப்­ப­டு­ப­வர்­க­ளில் பெரும்­பா­லோரை தீவி­ர­வாத இயக்­கங்­கள் சேர்த்­துக் கொள்­கின்­றன” என்று நோலினி காந்தா கூறு­கின்­றார். 
இவர் கம்­யூ­னிட்டி நெட்­வொர்க் பார் எம்­ப­வர்­மென்ட் என்ற அமைப்பை சேர்ந்­த­வர். தற்­போது மணிப்­பூர் மாநி­லத்­தில் போதை தொடர்­பான வழக்­கு­க­ளில் 250 இளை­ஞர்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர்.
கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை ஆல்­பர்ட் ஜான்­ச­னுக்கு கொரில்லா போர் பயிற்சி அளித்­தது. ஆனால் அவ­ரது உடல்­நி­லையை கருதி, இதில் இருந்து விலக்கு அளித்­தது. அதற்கு பதி­லாக இம்­பா­லுக்கு அனுப்பி பணக்­கா­ரர்­களை மிரட்டி பணம் பறிக்­க­வும், தீவி­ர­வாத குழு­விற்கு ஆட்­களை சேர்க்­கும் பொறுப்பை அளித்­தது. 
இவரை போலீஸ் 2015ல் கைது செய்து சிறை­யில் அடைத்­தது. நோயா­ளி­யாக உள்­ள­தற்­கா­க­வும், ஹெச்.ஐ.வி தொற்று இருக்­கும் சாத்­தி­யக்­கூறு இருப்­ப­தால், ஜாமீ­னில் வெளியே அனுப்­பி­யது. தனக்கு பரி­சோ­த­னை­யில் ஹெச்.ஐ.வி தொற்று இல்லை என்­பது தெரிய வந்­தது என்று ஆல்­பர்ட் ஜான்­சன் கூறு­கின்­றார்.
போதை புனர்­வாழ்வு மையத்­தின் கண்­கா­ணிப்­பா­ளர் இரான்­டனா சிங், இவர் மற்­ற­வர்­கள் பயன்­ப­டுத்­திய ஊசியை போதை மருந்து ஏற்­றிக் கொள்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தால், ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­ப­தற்கு அதிக வாய்ப்பு உள்­ளது. 
நாங்­கள் உன்­னிப்­பாக கண்­கா­ணித்து வரு­கின்­றோம் என்று அவர் தெரி­வித்­தார்.
மணிப்­பூர் மாநி­லத்­தில் கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை போன்ற தீவி­ர­வாத குழுக்­கள், ஹெச்.ஐ.வி நோய், போதைக்கு அடி­மை­யா­ன­வர்­களை கவ­னித்து, அவர்­களை தங்­கள் இயக்­கத்­தில் சேர்த்­துக் கொள்­கின்­றன.
லாய்ஸ்­ராம் தீபக் (23) போதைக்கு அடி­மை­யா­ன­வர் அல்ல. 
இவ­ருக்கு அவ­ரது பெற்­றோ­ரி­டம் இருந்து ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்­பட்­டது. 2002ல் தந்­தையை பறி­கொ­டுத்­தார். அதற்கு அடுத்த வரு­டம் தாயா­ரை­யும் பறி­கொ­டுத்­தார். 
அதன் பிறகு தனிமை வாழ்க்கை. மூன்று வரு­டத்­திற்கு முன், மக்­கள் விடு­தலை குழு (People’s Liberation Army)  என்ற தீவி­ர­வாத குழு­வி­டம் இருந்து, இவ­ருக்கு கடி­தம் வந்­தது. அந்த கடி­தத்­திற்கு நான் பதில் எழு­த­வில்லை. அந்த குழு­வைச் சேர்ந்த சிலர், எனது வீட்­டிற்கு வந்­த­னர். அவர்­கள் தலை­ம­றைவு வாழ்க்கை வாழ வேண்­டும். 
 அதிக அளவு பண­மும், நல்ல வேலை கொடுப்­ப­தா­க­வும் கூறி­னார்­கள்.
இதனால் சமூகத்தின் புறக்கணிப்பில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்கள். நான் தனிமையில் இருப்பதால், அவர்கள் கூறிய காரணங்கள் எனக்கு பிடித்தது. ஆனால் பாதுகாப்பு படையினர் பிடித்து விடுவார்கள் என்பதால் பயந்தேன்” என்று கூறுகின்றார் லாய்ஸ்ராம் தீபக்.
மணிப்பூர் எல்லை பகுதியில் இருக்கும் அண்டை நாடான மியான்மரில் இருந்து மக்கள் விடு­தலை குழு இயங்­கு­கின்­றது. 
இந்த குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் லாய்ஸ்­ராம் தீபக்­கிற்கு சுமார்ட் போன், லேப்­டாப், மோட்­டார் பைக், மாதம் ரூ.25 ஆயி­ரம் சம்­ப­ளம் தரு­வ­தாக ஆசை காட்­டி­யுள்­ள­னர். “அவர்­கள் என்னை அவர்­க­ளது தீவி­ர­வாத குழு­வில் சேர்த்­துக் கொள்ள முயற்சி செய்­த­னர். 
நான் அவர்­க­ளி­டம் இதை முத­லில் நிறுத்­துங்­கள். நான் சேர­மாட்­டேன் என்று கூறி­ய­தற்கு பிறகு, அவர்­கள் எனக்கு போன் செய்­வதை நிறுத்­திக் கொண்­ட­னர்” என்று கூறு­கின்­றார் லாய்ஸ்­ராம் தீபக்.
தீபக் பள்­ளி­யில் படித்­துக் கொண்டு இருக்­கும் போது, அவ­ருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்­பது பற்றி கூறப்­பட்­டுள்­ளது. 
அன்­றி­லி­ருந்து கஷ்­ட­கா­லம் ஆரம்­பித்து விட்­டது. “நான் பள்­ளியை விட்டு நின்­று­விட்­டேன். தற்­போது எனது நெருங்­கிய உற­வி­னர் ஒரு­வர் மட்­டுமே என்னை வந்து பார்க்­கின்­றார். நான் எனது இறுதி நாளை எதிர்­பார்த்­துக் கொண்­டுள்­ளேன். ஒரு­வேளை ஒவ்­வொ­ரு­வ­ருமே அந்த நாளுக்­காக காத்­தி­ருக்­க­லாம்” என்று கூறு­கின்­றார் லாய்ஸ்­ராம் தீபக்.
மணிப்­பூர் மாநி­லத்­தில் சேனா­பதி, தமி­லாங், சுர்­சான்­பூர், சன்­டால், தொவ்­பால், கிழக்கு இம்­பால், மேற்கு இம்­பால் ஆகிய மாவட்­டங்­க­ளில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்ட ஏரா­ள­மான ஆண்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.  
கிழக்கு இம்­பா­லில் உள்ள போதை புனர்­வாழ்வு மையத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள 5 ஆயி­ரம் பேர் தீவி­ர­வாத குழுக்­க­ளில் இணைந்­துள்­ள­தாக மதிப்­பிட்­டுள்­ள­னர். இதை விட அதி­க­மா­னோர் சேர்ந்­துள்­ள­தற்கு வாய்ப்பு உள்­ளது.
ஏன் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­ப­வர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேர்­கின்­ற­னர் என்ற கேள்­விக்கு, இவர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேர்­வ­தற்கு முக்­கிய கார­ணம் பணம் கிடைக்­கும் என்­ப­தால் அல்ல. இவர்­கள் சமு­தா­யத்­தில் இருந்து ஒதுக்­கி­வைக்­கப்­ப­டு­கின்­ற­னர். 
மணிப்­பூ­ரில் இவர்­களை மக்­கள் சாப­மாக கரு­து­கின்­ற­னர். 
இதுவே இவர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் அடைக்­க­லம் ஆவ­தற்கு கார­ணம் என்று மக்­க­ளுக்கு மருத்­துவ வசதி செய்து கொடுக்­கும் தன்­னார்வ தொண்­டர்­கள் கூறு­கின்­ற­னர்.
தொவ்­பால் என்ற நக­ரத்­தைச் சேர்ந்­த­வர் தோபி ஓனாம். இந்த பெண்­ம­ணி­யும் ஹெச்.ஐ.வி தொற்­றுக்கு ஆளா­ன­வர். 
இவர் மருந்து, நல்ல வச­தி­யான வாழ்க்­கை­யால் சமா­ளித்­துக் கொள்­கின்­றார். இவர் இதே நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கும் உதவி செய்து வரு­கின்­றார்.
பிசான்­பூ­ரைச் சேர்ந்த பிமலா தேவிக்கு (36) 2006ல் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­பது தெரிந்­த­வு­டன், அவ­ரது கண­வர் வீட்­டில் இருந்து விரட்­டப்­பட்­டார். 
இவ­ரது கண­வர் போதை பழக்­கத்­திற்கு அடி­மை­யா­ன­வர். இவ­ரி­டம் இருந்து பிமலா தேவிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்­பட்­டுள்­ளது.
“எனது மாமி­யார் தனது மக­னுக்கு போதை பழக்­கம் இருப்­பதை திரு­ம­ணத்­திற்கு முன்பு மறைத்­து­விட்­டார். எனது கண­வர் 2004ல் இறந்து விட்­டார். 
எனது கண­வர் இறப்­பிற்கு நானே கார­ணம் என்று குற்­றம் சுமத்தி என்னை வீட்­டில் இருந்து விரட்­டி­னர். நான் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தேன். எனக்­கும் நோய் தொற்று இருப்­பது தெரிந்­த­வு­டன், ஒரே­ய­டி­யாக வீட்டை விட்டு விரட்டி விட்­ட­னர் என்று கூறும் பிமலா தேவி, தற்­போது பெற்­றோர் வீட்­டில் தங்­கி­யுள்­ளார். இவ­ரது மக­ளு­டன் இவரை முற்­றத்­தில் ஒதுக்கு புற­மான இடத்­தில் தங்க வைத்­த­னர். இவர் கண­வர் வீட்­டாற் மீது வழக்கு தொடர்ந்­தார்.
 சென்ற வரு­டம் இவ­ரது கண­வர் சொத்தை பிமலா தேவிக்கு கொடுக்­கும்­படி நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.  
மணிப்­பூர் மாநில அரசு ஹெச்.ஐ.வி தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எத்­தனை பேர் என தெரி­விக்க மறுக்­கின்­றது. கம்­யூ­னிட்டி நெட்­வொர்க் பார் எம்­ப­வர்­மென்ட் அமைப்பை சேர்ந்த நோலினி காந்தா, தங்­கள் அமைப்­பி­டம் அரசு பகிர்ந்து கொண்ட தக­வல்­படி 42 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக கூறு­கின்­றார். 
ஆனால் அரசு கூறு­வதை விட பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அதி­கம். ஒரு லட்­சம் பேர் வரை பாதிக்­கப்­பட்டு இருப்­பார்­கள் என்று கூறு­கின்­றார்.
கண­வ­ரி­டம் இருந்து ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்­கப்­பட்ட நய­தோபி ஓனாம், “ திரு­ம­ணத்­திற்கு முன் நோய் தொற்று இருப்­பதை தெரி­விக்­காத கார­ணத்­தி­னால், அவ­ரது மனை­வி­யும் மூன்று அல்­லது நான்கு குழந்­தை­க­ளும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். 
இதுவே மணிப்­பூர் மாநி­லத்­தின் யதார்த்த நிலை என்று தெரி­வித்­தார்.
மணிப்­பூர் மக்­கள்­நல (சுகா­தார) துறை இயக்­கு­நர் பி.கே.சிங், “ தற்­போது நிலைமை மாறி­யுள்­ளது. பல தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து அரசு பல புனர்­வாழ்வு மையங்­களை அமைத்­துள்­ளது. இவை நன்கு செயல்­ப­டு­கின்­றன. 
முன்பு ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கிரா­மத்­தி­னர் மரத்­தில் கட்டி வைத்­த­னர் என்று தெரி­வித்­தார். தீவி­ர­வாத இயக்­கங்­கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்ட எத்­தனை பேரை, அவர்­க­ளின் இயக்­கத்­தில் சேர்த்­துள்­ளன என்­பது பற்­றிய விப­ரம் தெரி­யாது என்­றும் சிங் தெரி­வித்­தார்.
மணிப்­பூர் குழந்­தை­கள் நல பாது­காப்பு அமைப்­பைச் சேர்ந்த கெய்­சம் பிர­தீப் குமார், “நாங்­கள் பெரிய அள­வி­லான சவாலை எதிர் கொள்ள வேண்­டி­ய­துள்­ளது. 
ஒரு புறம் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் முறை­த­வ­றிய செக்ஸ் உறவு வைத்­துக் கொள்­வதை நிறுத்த வேண்­டி­ய­துள்­ளது. மற்­றொரு புறம் அவர்­க­ளின் செக்ஸ் உரி­மை­யை­யும், குழந்­தை­கள் பெற்­றுக் கொள்­ளும் உரி­மை­யை­யும் பாது­காக்க வேண்­டி­ய­துள்­ளது. 
இவை இரண்­டும் ஒன்­றுக் கொண்று முரண்­ப­டு­கி­றது.
கடந்த 30 ஆண்­டு­க­ளில் குழந்­தை­கள் உட்­பட ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்­கப்­பட்ட மூன்று தலை­மு­றை­யி­னர் உள்­ள­னர். இந்த நோயால் பாதிக்­கப்­பட்டு வெளியே தெரி­யா­மல் உள்ள குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள் உள்­ள­னர். 
இவர்­கள் தொடர்ந்து புறக்­க­ணிப்­புக்கு ஆளா­வ­து­டன், யாரு­டைய பரா­ம­ரிப்­பும் இன்­றி­யும் உள்­ள­னர். இந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளது.
இது சமூக நெருக்­க­டியை உண்­டாக்­கு­கி­றது. 
தீவி­ர­வாத இயக்­கங்­கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை சேர்த்­துக் கொள்­வ­தால் நிலைமை மோச­மாக மாறி­வ­ரு­கி­றது. இதை தடுக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இல்­லை­யெ­னில் மீட்க முடி­யாத நெருக்­கடி உண்­டா­கும் என்று” என்று அவர் தெரி­வித்­தார்.

                                                                                                                                                        -  நன்றி:  ரபி பானர்ஜி,
                                                                                                                                                                        தி வீக் வார இத­ழில் .

புதன், 19 ஏப்ரல், 2017

சேவைக் கட்டணம் தனியார்மயத்தின் மற்றொரு முகமூடி !

ழாவது ஊதியக் குழு பரிந்துரைத்திருக்கும் ஊதிய உயர்வைத் தனது ஊழியர்களுக்குத் தரப் போவதாக அறிவித்திருக்கும் மைய அரசு, அதனால் ஏற்படும் கூடுதல் செலவை மக்கள் தலையில் சுமத்த முயலுகிறது. குறிப்பாக, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், நிமான்ஸ் உள்ளிட்ட பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் – என மைய அரசின் நிதிஉதவி பெறும்  600-க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் அதிக செலவில் 30 சதவீதத்தை அந்தந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டுதான் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில் மைய அரசின் சுற்றறிக்கையைக் காரணமாக வைத்து  இன்னொரு மடங்கு கல்விக் கட்டணத்தை உயர்த்துவது எளிதாகிவிட்டது.
டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெறுவதற்காக முதல்நாள் இரவே வந்து, அம்மருத்துவமனையின் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் படுத்துறங்கும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும். (கோப்புப் படம்)
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால், பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மனநல மருத்துவமனைக்குக் கூடுதலாக 50 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இக்கூடுதல் செலவில், 15 கோடி ரூபாயை அம்மருத்துவமனையே ஈடுகட்ட  வேண்டுமெனில், நோயாளிகளிடமிருந்து இந்தத் தொகையைப் பிடுங்குவதைத் தவிர வேறுவழியில்லை. “நோயாளிகள் பெறும் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையென்றால், மருத்துவ வசதிகளுக்குச் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு, அதனை நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியிருக்கிறது, அம்மருத்துவமனை நிர்வாகம். கட்டணம் வசூலிக்கவில்லையென்றால், நோயாளிகளுக்கு இப்பொழுது கிடைக்கும் அளவில்கூடத் தரமான சிகிச்சை கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பொது மருத்துவமனைகளில் முன்பு போல அனைத்து நிலைகளிலும் இலவச சிகிச்சை இப்பொழுது தரப்படுவதில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், பரம ஏழை நோயாளிகளாக இருந்தாலும், காப்பீடு அட்டை இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் அறுவை சிகிச்சைக்குத் தேதி தரப்படுகிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் நோய்களுக்கான மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதில்லை. அவற்றை வெளியே வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவர்களே சீட்டு எழுதிக் கொடுத்துவிடுகின்றனர். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட முக்கியப் பரிசோதனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, நோயாளிகளிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. இவையல்லாமல், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் ஏற்பாடுகள், பார்வையாளர் கட்டணம் என அரசு மருத்துவமனைகள் வசூல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்ற மைய அரசின் சுற்றறிக்கை, இனி இலவச மருத்துவமே கிடையாது என்ற நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். ஆசிரியர்களுக்குத் தரும் சம்பளத்தின் ஒருபகுதியை மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றால், இனி ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படும்.
கலெக்சன் காட்டவில்லையென்றால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் அன்றைக்கான கூலி கிடையாது என்பது தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் எழுதப்படாத நடைமுறையாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், அ.தி.மு.க. அரசு மோடி அரசிற்கு முன்னோடியாக உள்ளது.
சம்பள உயர்வை ஈடுகட்ட, பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என இன்று உத்தரவிடும் மைய அரசு, நாளை அனைத்துச் சேவைகளுக்கும் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறத் தயங்காது. ரயில்வேயில் கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு ரயில் கட்டண முறை இந்த அபாயத்திற்கான முன்னறிவிப்பு.
அரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.
                                                                                                                                                       -அழகு 
ன்றி:புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தகுதி நீக்கம்

"தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்."
                                                                                               -இந்திய தேர்தல் ஆணைய சட்டம்&விதிகள் .


தான் வெற்றி பெற கிட்டத்தட்ட அவர்களின் கணக்குப்படியே 90 கோடிகளை மக்களுக்கு கையூட்டாக கொடுத்துள்ளார்.தினகரன்.( உண்மையில் 200கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.)கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

அவரின் அடிமைகளே அவரை மாட்ட வைத்துள்ளனர்.


இதற்காக தேர்தல் ஆணையம் ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலை நிறுத்திவைப்பது என்பது தவறான முடிவு.தினகரனை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான செயலாக இருக்கும்.

அதுதான் இது போல் பணத்தை இறைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற எண்ணும் அரசியல்வியாதிகளுகு சரியான பாடமாக அமையும். 

தேர்தல் ஆணையம் மீது ஒரு பயம் வரும்.

ரா.கி,நகர் தேர்தலில் தினகரன் ஒன்று தான் வெல்ல வேண்டும்.அல்லது தேர்தலையே ஒத்தி வைத்து தான் தப்பிக்க வேண்டும் என்றுதான் இவ்வாளவு பகிரங்கமாக தேர்தல் அலுவலர்கள்,அரசு அதிகாரிகள்,காவல்துறை துணையுடன் பணத்தை அள்ளி வீசுகிறார்.


அவர் போன்ற பணபலத்தால் வெற்றியை பெற எண்ணுபவர்களை தேர்தல் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்தால் ஒழிய வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளதாகஅதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்றிரவு, 11:30 மணிக்கு வெளியானது. 

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் கமிஷன், ரத்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தலில்  
தி.மு.க., சார்பில், மருதுகணேஷ்,அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரனும், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், முன் னாள் அமைச்சர் மதுசூதனனும் வேட்பாளர் களாக களம் இறங்கினர்.  
 மொத்தம், 62 பேர் களமிறங்கினர்.

எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தினகரன் பணத்தை வாரி இறைத்து வந்தார். தேர்தல் கமிஷன் கெடுபிடி களை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக் காளர்களுக்கு வழங்கிய, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. 

இதையடுத்தும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள்மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.

இந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர் களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொரு வரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டில்லிக்கு விரைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கியது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆலோசனையில் இவர்கள் பங்கேற்றனர்.
 நீண்ட ஆலோசனைக்கு பின், தேர்தலை நிறுத்துவது  என முடிவு செய்யப்பட்டது. 
ஆனால் இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தைத்தான் காட்டுகிறது.
வானளாவ அதிகாரம் வைத்திருக்கும் ஆணையம் தனது விதிகளை மீறி வாக்கு சேகரிப்பவர்களை அந்தத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தடை போட்டு தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான செயலாக இருக்கும்.
வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாத ஆணையம் இது போன்ற தகுதி நீக்கம் ஆணையை பிறப்பித்தால்தான் அந்த வேட்பாளருக்கும், கட்சிக்கும்  பணம்கொடுப்பது பற்றி ஒரு பயம் வரும்.
தான் தோற்றுவிடக்கூடாது என்று பணத்தை வாரி இறைக்கும் தினகரன் போன்றோருக்கு இது போன்ற தேர்தல் ஆணைய தேர்தல் நிறுத்தம் ஆணை ஒரு நல்ல வாய்ப்பு.
இப்போது எதற்காக தேர்தல் நிறுத்தம் செய்யப்பட்டதோ அதே பணம் வழங்கல் அடுத்த தேர்தலிலும் நடக்கத்தானே செய்யும்.

இதே முறைதவறிய தினகரன் அடுத்து நடக்கும் தேர்தலில் போட்டியிட்டு இதே தவறைத்தானே செய்வார்?
எனவே தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அங்குள்ள ஜால்ரா அதிகாரிகள்,காவல்துறையினரை ஒட்டு மொத்தமாக மாற்றும் ஆணையை தயாரித்து விட்டு தேர்தல் நடைமுறையை அறிவித்து அவர்களை உடனே பணியில் சேர வைக்க வேண்டும்.

ராஜேஷ் லக்கானி,சுதீப் ஜெயின்,சந்திப்பு சக்ஷேனா,பிராவின் குமார் என்று ஒரு கடசி ஆதரவு அதிகாரிகளை ஆளுங்கடிசி தரும் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையராக நியமிக்காமல் கண்டிப்பான இ.ஆ.ப, அதிகாரிகள் பட்டியலை தயாரித்து சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கடசிகள் அணைத்திடமும் கருத்து கேட்டு தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்.

தன்னிடம் அதிகாரங்களை குவித்து வைத்துள்ள தேர்தல் ஆணையம் தனது சட்ட திட்டங்களை உடைக்கும் தினகரன் போன்ற வாக்குக்கு  பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யாமல்,மேலும் ஒரு தேர்தலில் நிற்க கூடாது என்று தடை விதிக்காமல் இப்படி தேர்தலையே நிறுத்துவது மூட்டை பூச்சியை நசுக்காமல் வீட்டையே கொளுத்துவது போல்.


கையில் உள்ள சொற்ப காசையும் போட்டு தேர்தல் பனி செய்த மற்ற வேட்பாளர்கள் உழைப்பு,பணம் , முழுக்க வீண் தானே.


"தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்."

என்பது தேர்தல் ஆணைய விதி.

இதன் பேரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தஞ்சை,அரவக்குறிச்சி போல் அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டி என்றால் பணம் கொடுத்தவர்கள் அங்கு வென்றது போலத்தானே இங்கும் தினகரன் வெற்றி பெறுவாரா.அதைத்தான் தேர்தல் ஆணையம் விரும்புகிறதா?

எதிர்க்கட்ச்சிகள் கூப்பாட்டுக்குத்தான் இந்த கண்துடைப்பு ஒத்திவைப்பா?

அதோடு தேர்தல் ஆணையத்தின் பணம் கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க வக்கற்ற கையாலாகாத்தனத்தையும் இந்த தேர்தல் நீக்கம் காட்டிவிடுகிறது.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...