bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

ஊடகங்கள் திணித்த கறைகள்.

சென்ற 2011 தேர்தலில் திமுகழக ஆட்சிக்கு எதிராக அதிகம் பேசப்பட்டவை ஈழப்படுகொலைகளை கருணாநிதி தடுக்கவில்லை,அறிவிக்கப்பட்ட நான்குமணி நேர மின்வெட்டு,2 ஜி ஊழல்.
இவைகள்தான் திமுகவை எதிர் கட்சித்  தலைவர் பதவியை கூட தட்டிப்பறித்தவை.
இதற்கு முன்னரும் கூட திமுக எதிர்க் கட்சித்தலைவர் பதவியை இழந்திருக்கிறது.4 இடங்கள் மட்டுமே வென்ற காலங்களும் உண்டு.ஏன் திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணாவே திமுக சந்தித்த முதல் தேர்தலில் தோற்றிருக்கிறார்.
ஆனால் அங்கிருந்துதான்  கலைஞர் தனது இன்றையவரையுலுமான வெற்றிக்கணக்கை துவக்கினார்.
ஈழப் போரில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப் பட்ட போது கலைஞர் முதல்வர் அவ்வளவுதான் .இந்திய அரசு,மட்டுமல்ல சர்வ வல்லமை படைத்த அமெரிக்கா ,பிரிட்டன் ஏன் ஐ.நா சபையே அக்கொலைகளை எதிர்த்தும் தடுத்து நிறுத்த முடியாத நிலை வெறும் ஒரு மாநில முதலமைச்சர் எப்படி நிறுத்த முடியும்?
தமிழ் நாடு முதல்வர் கட்டுப்பட்டிலா இந்திய அரசின் வெளிநாட்டு உறவுத்துறை,பாதுகாப்புத்துறை இருக்கிறது.
ஆனாலும் தமிழக மக்கள்  கலைஞர் ஈழப்படுகொலைகளை தடுக்காத துரோகத்தை மட்டுமல்ல ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றும் நம்ம வைக்கப்பட்டார்கள்.அதற்கு கடுமையாக உழைத்தவர்கள் நெடுமாறன்,வைகோ,சீமான் போன்ற ஈழப் போராளிகள்.இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.
ஆனால் அந்த போராளிகள் சாயம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள்களில் முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தை ஈழத்தாய் ஜெயலலிதா இடித்தவுடனே வெளிறி விட்டது.
மின் வெட்டு ஜெயலலிதா ஆட்சிசெய்த ஐந்தாண்டு காலமும் தீர்க்கப்படவே இல்லை.அதிகரித்து கோவை,திருப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பைத்தான் தந்தது.
திமுக ஆரம்பித்த மின் உற்பத்தி திட்டங்கள் சத்தமே இல்லாமல் மூடப்பட்டன.
ஐந்தாண்டுகளாக அதிக விலைக்கு வெளியில் தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஆயிரக்கணக்கான கோடிகள் மின்துறைக்கு இழப்பை ஏற்படுத்தி வைத்ததுடன்.ஆயிரக்கணக்கான கோடிகள் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யவும் வாய்ப்புகள் உருவானது.
வெளியில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி விட்டு தமிழ் நாடு மின் மிகை மாநிலம் என்று ஜெயலலிதா அறிவித்த வேடிக்கைதான் நடந்துள்ளது.
அடுத்து வருவது 2ஜி .அதை பற்றி அய்யா சுப,வீரபாண்டியன்  அவர்கள் சொல்வதை கீழே தருகிறோம்.
தவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் -அது 2ஜி வழக்கு!
தேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள்.
 இப்போது அந்த ‘சீசன்’ தொடங்கியுள்ளது.
2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள். அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள். அடுத்தததாக, அந்தத் தொகை அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் எங்கும் காணப்பட வில்லையே ஏன் என்று கேளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாதவர்கள்தாம் 2ஜி பற்றி நிறையப் பேசிக் கொண்டுள்ளனர்.
பணிவோடு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், 2ஜி குறித்துக் காரசாரமாக மேடைகளில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கே கூட இந்த விளக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி, அந்த உண்மைகளைச் சின்னக் கணக்குகளின் மூலம் நாம் பார்த்து விடுவோம். ஆ. ராசா அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. இன்றிருப்பது போல் அன்று பலரிடம் கைத் தொலைபேசி இல்லை. எனவே 52.75 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விலை போயின. ஒரு மெகா ஹெட்ஸ் 276 கோடிக்குப் போயிற்று. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 14,559 கோடி.
தலைமைத் தணிக்கைக் கணக்காளராக அன்று இருந்த வினோத் ராய் கற்பனையில் ஒரு கணக்குப் போட்டார். அவர் 2008 முதல் 2013 வரை அப்பதவியில் இருந்தார். ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்று இல்லாமல் அலைக்கற்றைகளை ஏலத்துக்கு விட்டிருந்தால் ஒரு மெகா ஹெட்ஸ் 3350 கோடிக்கு விற்பனையாகி இருக்கும் என்பது அவர் கணக்கு. அது அவருடைய கற்பனைக் கணக்கு. அதன்படி பார்த்தால், 1,76,712 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்றாகிறது. போனால் போகிறது என்று 712 கோடியை விட்டுவிட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அந்த 1.76 என்னும் தொகை வந்தது.
இங்கும் கூட இரண்டு செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. வினோத் ராய் கணக்குப் படியும் அது ஊழல் அன்று, அரசுக்கான இழப்புத் தொகை. அவ்வளவே. இரண்டாவது, 1.76 இல் வரப்பெற்ற 14ஆயிரம் கோடியைக் கழிக்க வேண்டும் இல்லையா? அதனைக் கழித்துவிட்டு 1.62 லட்சம் கோடி என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஆ. ராசா, 2011 பிப்ரவரி 2 ஆம் நாள் கைது செய்யப்பாட்டார். அதாவது, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு! 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1.76 லட்சம் கோடி என்ற தொகை எங்கும் குறிக்கப்படவில்லை. தணிக்கையாளரின் கணக்கை சி.பி.அய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கணக்குப் போட்டு 32 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.
தணிக்கையாளர் கூறியது போல், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகள், ஏலத்துக்கே விடப்பட்டன. 2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க வேண்டுமென்றால், 6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க வேண்டும்? ஆனால் 367.2 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. அதாவது ஒரு மெகா ஹெட்ஸ் 297 கோடி ரூபாய். அவ்வளவுதான்.
ஏலத்துக்கு விட்டும், 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மெகா ஹெட்ஸ் 21 கோடி ரூபாய்தான் கூடுதல் விலைக்குப் போயுள்ளது. வினோத் ராய் கணக்குப்படி 3350 கோடிக்கே விற்பனை ஆகியிருந்தால், 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் வந்ததோ வெறும் ஒரு லட்சத்து ஒன்பது ஆயிரம் கோடிதான். அப்படியானால் இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறலாமா? மோடி உட்பட எல்லோரையும் கைது செய்யலாமா?
தலைமைத் தணிக்கைக் கணக்காளர் போன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றபின், அவர்களுக்கு வேறு அரசு பதவிகள் வழங்கக்கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இப்போது ஓய்வு பெற்றபின், வினோத் ராய், இன்னொரு பெரிய பொறுப்பில் (UN panel of external auditors and honorary advisor to the railways) அமர்த்தப்பட்டுள்ளார்.
புரிய வேண்டிய கணக்குகள் இப்போது புரிந்திருக்கும்!
ஆக திட்டமிட்டே  மக்களுக்கான ஆட்சியை நடத்திய திமுக,திமுகத்தலைவர் மீது  அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளார்.
கலைஞர் ,திமுக மீதான குற்றச்சாட்டுகள் என்றால் எட்டுகாலச்செய்திகளாக வெளியிடும் இந்திய ஊடகங்கள் அதற்கு திமுக தரப்பில் இருந்து வரும் விளக்கங்களை மட்டும் வெளியிடுவதில்லை.
இதில் வட மாநில,தமிழக ஊடகங்கள் அனைத்தையும் கலைஞர் எதிர்ப்பு ஒன்றுமட்டுமே இணைக்கிறது.
அதற்கு சாதியியல் மட்டுமே காரணமாக இருக்கிறது.இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட மேல் சாதியினர் கையில் மட்டும்தான் உள்ளது.
தப்பித்தவறி மற்ற இனத்தவர்கள் நடத்தும் புகழ் பெற்ற ஊடகங்களிலும் தலைமை பொறுப்பில் அந்த வகையினரே உள்ளனர்.[உதாரணமாக :தந்தியில் பாண்டே,ஹரிஹரன் ] 
ஆனாலும் மாயாவதி,பாஸ்வான்,இவர்களைப்போல் கலைஞரை இந்த ஊடகங்கள் ஓரங்கட்ட முடியவில்லை.
93 வயதிலும் இவர்களை ஒரு கை பார்த்து வருகிறார்.
கலைஞர் .திமுக இல்லாமல் தமிழ் நாட்டில் அரசியல் இருந்ததில்லை.இனி இருக்கப் போவதும் இல்லை.கலைஞர் தனக்கு சரியான வாரிசை கைகாட்டியுள்ளார்.
===================================================================================

வியாழன், 14 ஏப்ரல், 2016

யாருக்கு (தமிழ்ப்) புத்தாண்டு.?




  • இன்று சிலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கு வழங்கினர்.
    எனக்கான தமிழ்ப் புத்தாண்டு "தை"முதல் நாளிலேயே துவங்கி விட்டது. உலகம் சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்கும் ஓராண்டு கணக்கான அறிவியல் ரீதியலும் ,தமிழர் பண்பாட்டு படியும்  தை யே சரி.
    “நித்திரையில் இருக்கும் தமிழா 
    • சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு 
    • அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே” 
      “அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் 
      தரணி ஆண்ட தமிழருக்கு 
      தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” 
    • தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! இது பாவேந்தர் பாடல்.
    ராஜராஜ சோழன் காலத்துக்குப்பின்னர்தான் களப்பிரர் ஆட்சியில் கானாமலாக்கப் பட்டிருந்த பிராமணர்கள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை ராஜக் குருக்களாகி தமிழர்கள் மீது செலுத்தினர்.அப்போதுதான் வர்ணங்கள் அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்து சாதி வேறுபாடுகளை ராஜராஜன் தூக்கிப்பிடித்தான்.
    கீழ்ச்சாதியினராக்கப்பட்டவர்கள் மேட்டுக்குடியினர் தெருக்களை நடக்க கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன.
    அதேபோல்தான் சித்திரை தமிழர்களுக்கு  புத்தாண்டு பிறப்பாக்கப்பட்டது.12 தமிழ் மாதங்களில் தமிழ் பெயர்கள் இல்லை.
    அதை விடக் கொடுமை தமிழர் ஆண்டுகள் 60இல் ஒன்று கூட மருந்துக்கும் தமிழ் இல்லை.அனைத்தும் செத்துப்போன கடவுள் மொழியான சமஸ்கிருதம்தான்.
    அதை விட அசிங்கம்' பரந்தாமன் நாரதரை பெண் உரு கொள்ள செய்து புணர்ந்து அதில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களைத்   தாம் நம் 60 தமிழ் ஆண்டுகளுக்கு பார்ப்பனர்கள் பெருந்தன்மையுடன் இட்டுள்ளார்கள். !
    இப்போது சொல்லுங்கள் துர்முகி புத்தாண்டு வாழ்த்துக்களை பிராமணர்களுக்கு.
  • தமிழர்களுக்கு அல்ல.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதா?

தேர்தல் ஆணையம் !

"தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக அரசியல் கட்சிகள் புகார் கூறியுள்ளனர். 

அவர்கள் சொல்வதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த புகாரின் உண்மை தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் விதிமுறை மீறப்படுவதாக அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார் மீது அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஒருதலைபட்சமாக செயல்படும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று தமிழ் நாடு தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட வந்த தலைமைத்தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறியுள்ளார்.
தமிழக மாவட்ட ஆட்சியாளர்கள்,காவல்துறை அதிகாரிகளின் ஜெயலலிதா விசுவாசம் உலகறிந்தது.எத்தனையோ செய்திகள்,படங்கள்,காணொளிகள் வெளியாகியுள்ளன.
அவர்களை மாற்றாமல் இன்னும் எத்தனை காலம் உண்மைத்தன்மையை ஆராய்வார்கள்.?
மே 19 வரையா?
ராஜேஷ் லக்கானி தமிழ் நாட்டில்தானே இருக்கிறார்.அவருக்கு இங்குள்ள அதிகாரிகளின் ஜெ விசுவாசம் தெரியாதா?
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
அல்லது அந்த கூட்டத்தில் இவரும் இருக்கிறாரா?
அம்மாவின் ஆணைக்கிணங்க அதிக மழை பெய்துள்ளது என்று சொல்லுமளவு கரை வெட்டி கட்டாத மாவட்ட செயலாலளர்களாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களைக் கொண்டது தமிழ்நாடு .
ஜெயலலிதா படத்தை மாட்டும் காலம் வரை காத்திருந்தே  அரசு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார்கள் தர கொண்டு வந்த  நிவாரணப் பொருட்களை பிடுங்கி அதிமுகவினர்களிடம் கொடுத்து ஜெயலலிதா படங்களை ஒட்டிய பின்னர் வழங்கியவர்கள்தான் திருப்பூர்,கடலூர் மாவட்ட ஆட்சியர்கள்.
ஜெயலலிதா புகழ் பாடும் தொலைக்காடசிகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன.கலைஞர் ,சண் செய்திகள் ஒளிபரப்பபடுவதில்லை.காரணம் அரசு கேபிள் தலைவர் அதிமுக கட்சிக்காரர்.அவரை மாற்ற கூட தேர்தல் ஆணையத்துக்கு ஆதாரம் தேவையா?
சிறுதாவூரில் கண்டெய்னர்கள் நிற்பதாக செய்த வந்த வுடனே யார் புகார் தரவும் காத்திருக்காமல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?அதற்கு அந்த அதிகாரம் இல்லையா என்ன?
ஆனால் எதிர்கட்சியினர் புகார் சொல்லி உடனே நடவடிக்கையில் இறங்காமல் மூன்று நாட்களுக்கு பின்னர் போய் பார்வையிட்டு அப்படி ஒன்றும் இல்லை என்பதற்கு எதற்கு தேர்தல் ஆணையம் ./
திர்ட்டுத்தனம் செய்பவர்கள் தங்கள் குட்டு வெளிப்பட்டப் பின்னரும் அங்கேயே தங்களைப் பிடித்துக்கொள்ள ஆள் வரும் வரை காத்திருப்பார்களா என்ன?
அந்த கன்டெய்னருக்கு பாதுகாப்பு தந்ததே தமிழகக் காவல்துறை தான்.
இந்த காவல்துறையும்,மாவட்டச் செயலாளர்களான மாவட்ட ஆட்சியர்களையும் வைத்துதான் தமிழ் நாடு தேர்தலை சந்திக்கப் போகிறதா?
அப்படி என்றால் வெற்றிப்பெறுவது யார் என்பது தெரியாதா மக்களுக்கு?
234 தொகுதிகளிலும் இரட்டை இலைதான் என்று ஜெயலலிதா  சும்மா சொல்லவில்லை .சம்பத் போன்ற மாவட்ட  ஆட்சியர்கள்,எந்த புகார் என்றாலும் நிர்வான்சதனுக்கு கொரியரில் அனுப்பிவிடும் தமிழக இந்திய தேர்தல் ஆணையம் போன்ற வலுவான கூட்டணி இருக்கையில் அதிமுக தமிழ் நாடு மட்டுமா?புதுச்சேரி,கேரளா போன்ற மாநிலங்களிலும் வெற்றிக்கொடி கட்டத்தான் செய்யும்.
100 சதவிகிதம் வாக்குப்பதிவுக்கு தினசரி பேரணி,கூட்டங்கள், கணொளிகள் என்று முனைப்பு காட்டும் தேர்தல் ஆணையம் நியாயமான வாக்குப்பதிவு நடக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமே?
100 சதவிகித வாக்குப் பதிவை விட முறைகேடில்லா வாக்குப்பதிவுதான் அவசியம் .தேர்தல் ஆணையம் அதற்குத்தான் உத்திரவாதம் தர வேண்டும் .
அது தொடர்பாக வரும் குற்றச்சாட்டுகளை உடனே நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதே ஆணையத்தை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையைக் கொண்டுவந்து விடும்.நசீம் ஜைதி யை விட ராஜேஷ் லக்காணிதான் பொறுப்பு அதிகம்.அதை அவர் தட்டிக்கழித்தால் அவர் பெயரை  முதல்வராக ஜெயலலிதா இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையராக நியமிக்க  பரிந்துரை செய்த காரணம்  முற்றுப்பெற்று விட்டதாகத்தான் உணர முடியும்.சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் ?


அதற்கு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க அந்தந்த மாநில முதல்வரிடமிருந்து மூன்று இ.ஆ.ப.அதிகாரிகளை பரிந்துரைக்க செய்வதை முதலில் கை விட வேண்டும் .இ.ஆ.ப.அதிகாரிகள் நன்னடத்தை விபரங்கள் மத்திய அரசிடம் கிடையாதா?அதில் இருந்து கண்டிப்பான அதிகாரிகளை இந்திய ஆணையம் தேர்வு செய்து நியமிக்க முடியாதாஎன்ன.
மாநில  முதல்வர்  தனக்கு ஆதரவானவர்கள் [பிரவீன் குமார்,சுதி ஜெயின் போன்று]பெயரை சிபாரிசு செய்வாரா?கண்டிப்பான அதிகாரிகளை[டி.என்.சேசன்,நரெஷ் குப்தா போன்று]சிபாரிசு செய்வாரா?

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

விக்கிலீக்ஸ் அடுத்து பனாமா லீக்ஸ்?

விக்கிலீக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரகம் மூலம் வெளிநாடுகளை உளவு பார்த்த ரகசியங்கள் என 50 ஆயிரத்துக்ம் மேற்பட்ட ஆவணங்களை கடந்த 2010ம் ஆண்டு வெளியிட்டு அமெரிக்காவை அதிர்ச்சியடைச் செய்தது. 
இந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகள் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை குவித்துள்ள விவரங்களை எச்.எஸ்.பி.சி. வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் அம்பலப்படுத்தினார்
. இதேபோல் உலக நாடுகளின் தலைவர்களும், பிரபலங்கள் தங்கள் நாட்டில் சுருட்டிய பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்ததில், உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வெளிநாடுகளில் பதுக்கிய கோடிக்கணக்கான ரகசிய சொத்துக்கள் அம்பலமாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா. 
கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கருப்பு பணத்தை பதுக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 
இதற்காக 35 நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளது. அங்குள்ள எச்எஸ்பிசி, யுபிஎஸ், கிரடிட் சூஸ், டெட்ஸ் வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் மொசாக் பொன்சேகா நிறுவனத்துக்கு கடந்த 1970ம் ஆண்டுகளில் இருந்து நெருங்கிய தொடர்பு உள்ளது. 
இந்த நிறுவனத்தின் முக்கிய வேலையே, கருப்பு பணத்தை பதுக்க விரும்புவோருக்கு வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மற்றும் ரகசிய வங்கி கணக்குகள் ஏற்படுத்தி கொடுப்பதுதான். தங்கள் நாட்டில் லஞ்சம் வாங்கி சுருட்டிய பணம் அல்லது வரிஏய்ப்பு செய்த பணத்தை வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்க விரும்புபவர்கள் எல்லாம் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தை அணுகினால் ஏதாவது ஒரு நாட்டில் போலி நிறுவனத்தை ஏற்படுத்தி கொடுத்து வங்கியில் கருப்பு பணத்தை பாதுகாக்க உதவி செய்வர். 
உலகம் முழுவதும் உள்ள தற்போதைய மற்றும் மாஜி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் 140 பேரின் ரகசிய சொத்து ஆவணங்கள் உட்பட 11.5 மில்லியன் டாலர் ஆவணங்கள் மொசாக் பொன்சேகா நிறுவனத்திலிருந்து தற்போது கசிந்து ஜெர்மனியைச் சேர்ந்த சுடேட்ஸ் ஜீடெங் என்ற பத்திரிக்கை நிறுவனத்துக்கு கிடைத்தது.  
இதை சர்வதேச புலனாய்வு நிருபர்கள் அமைப்பு விசாரித்து வருகிறது. இது தவிர 78 நாடுகளைச் சேர்ந்த 107 செய்தி நிறுவனங்களும் இதை ஆய்வு செய்து வருகின்றன. சீன அதிபர் ஜீ ஜின்பிங், சவுதி மன்னர், உக்ரேன் அதிபர், ஐஸ்லேண்ட் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், லிபியா முன்னாள் அதிபர் கடாபி, சிரியா அதிபர் பஷார் அல் அசாத் ஆகியோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்கள் எல்லாம் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.  
ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமான சிலர் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வங்கிகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் பதுக்கி வைத்துள்ளதும் இந்த ஆவணத்தில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து சர்வதேச புலனாய்வு நிருபர்கள் அமைப்பின் இயக்குனர் ஜெரார்ட் ரைல் கூறுகையில், ‘‘இந்த பனாமா லீக்ஸ் ஆவண வெளியீடு, கருப்பு பணத்தை பதுக்க உதவும் வெளிநாடுகளுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என நினைக்கிறேன். 
இந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கு அரசியலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்’’ என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராமோன் பொன்சேகா கூறுகையில், ‘‘இந்த ஆவண வெளியீடு ஒரு குற்றம், பனாமா நாட்டின் மீதான தாக்குதல். நாங்கள் போட்டி நிறுவனமாக இருப்பது சில நாடுகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது’’ என்றார். 
பனாமா அரசு கூறுகையில், ‘‘சட்டவிரோத செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பான விசாரணைக்கு பனாமா முழு ஒத்துழைப்பு அளிக்கும்’’ என்று கூறியுள்ளது. 

பனாமா லீக்ஸ் ஆவணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர்கள் கே.பி.சிங்(டி.எல்.எப்), கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி, அப்போலோ டயர் உரிமையாளர் உட்பட 500 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
 பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் பற்றி விசாரிக்க வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர் ஏற்கனவே வெளியிட்ட பட்டியலால், கருப்பு பணத்தை பதுக்கி வைத்த இந்தியர்கள் பலர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கினர். 
தற்போது பனாமா லீக்ஸ் ஆவணத்தால், இன்னும் பலர் சிக்குவர் எனத் தெரிகிறது.

பனாமா லீக்ஸ் பட்டியலில் ஐஸ்லேண்ட் பிரதமர் சிக்புந்துர் டேவிட் குண்லாக்சன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் வின்ட்ரிஸ் என்ற பெயரில் வெளிநாட்டில் ரகசிய நிறுவனம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
ஆனால் தனக்கு எந்த ரகசிய சொந்துக்களும் இல்லை என டேவிட்குண்லாக்சன் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் இந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். 
இதுபோல் பல நாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு  சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பனாமா லீக்ஸ் ஆவணத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 500 இந்தியர்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளது என்று ்தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
.

சனி, 2 ஏப்ரல், 2016

நீதியரசர் மகேந்திர பூபதி .


பி.ஆர்.பி., உட்பட, மூன்று பேரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, மார்ச், 29ல் பிறப்பித்த உத்தரவு:கிரானைட் முறைகேடு மேல்முறையீட்டு வழக்குகளில், உயர்நீதிமன்ற கிளையின், இரு தனி நீதிபதிகளின் உத்தரவுகள் வேறுபட்டதாக இருந்தது.மூன்று வழக்குகளில், ஒரு விதமாகவும், 40 வழக்குகளில் ஒரு விதமாகவும், இந்நீதிமன்றம் வழக்குகளை விசாரணைக்கு எடுக்காத நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் வேறுபாட்டினை ஆராய இயலாது.கீழமை நீதிமன்றம் தன் முன்னுள்ள ஆவணங்கள் அடிப்படையில் செயல்பட முடியும். அச்செயலானது, 'சட்டம் அறிந்தவர் துாங்குவது போல் நடிப்பவராக உள்ளார்' என்று காட்டும் நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி சி.டி.செல்வத்தின் தீர்ப்பை மறைத்து, இந்நீதிமன்றத்திற்கு அரசு தரப்பு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.எதிரிகள் மீதான குற்றச்சாட்டிற்கு, கலெக்டர் அபராதம் மட்டும் விதிக்கலாம். மனுவை மதுரை கலெக்டர் தாக்கல் செய்வதற்கு பதில், 'நான் தான் கலெக்டர்' என, அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்துள்ளார்.இதனால் எதிரிகளை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக அன்சுல் மிஸ்ரா, உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய அரசிடம் முன் அனுமதி பெற உத்தரவிடுகிறேன் இவ்வாறு, அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
மகேந்திர பூபதி, 45, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடுவைச் சேர்ந்தவர். மதுரை சட்ட கல்லுாரியில், பி.எல்., முடித்தார். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்தார். சிவில் நீதிபதி பணிக்கான தேர்வில்வெற்றி பெற்று, ஒன்பதுஆண்டுகளுக்கு முன், மாஜிஸ்திரேட் பொறுப்பை ஏற்றார். கன்னியாகுமரி, தக்கலை, சிவகங்கை, இளையான்குடியில் பணிபுரிந்துள்ளார். 2013 மே மாதம், மேலுாரில் பொறுப்பேற்றார். மகேந்திர பூபதி குறித்து, தொடர்ந்து உயர் நீதிமன்றத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இவரது மனைவி ஆசிரியை. மகேந்திர பூபதியின் சகோதரரும் மாஜிஸ்திரேட்டாக உள்ளார். கிரானைட் வழக்குகளில், துவக்கத்தில் இருந்தே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக இவர் செயல்பட்டதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னும், விசா-ர-ணைக்கு எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்ததாகவும், சர்ச்சைகள் எழுந்தன.
பி.ஆர்.பி., நிறுவனம் உட்பட, பல நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட கிரானைட் முறைகேடு வழக்குகளில், மூன்று வழக்குகள் தொடர்பான குற்றப் பத்திரிகைகளில், கிரானைட்உரிமையாளர்கள் மீது, திருட்டு குற்றச்சாட்டை மட்டும் விசாரணைக்கு ஏற்று, கனிமவளச் சட்டம், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம், வன்கொடுமைச் சட்டம் உட்பட, பல பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஏற்க, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மறுத்தார்.இதையடுத்து, போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை, விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 'இந்த உத்தரவை மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி நிறைவேற்றவில்லை' என்றும், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், 'துாங்குபவர்களை எழுப்பலாம்; துாங்குவது போல் பாவனை செய்வோரை எழுப்ப முடியாது. மேலுார் மாஜிஸ்திரேட், இரண்-டா-வது வகையைச் சேர்ந்தவர். குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும், விசாரணைக்கு எடுக்க வேண்டும். மாஜிஸ்திரேட் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்' என, உத்தரவிட்டார்.
இரண்டு வழக்குகளில், பி.ஆர்.பி., நிறுவன அதிபர், பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார், திருப்புத்துார் சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, மார்ச், 29ல் உத்தரவிட்டார். இது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியிடம், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பஷீர்அகமது, தலைமை குற்றவியல் நடுவர் சரவணன் நேரில் விசாரணை நடத்தினர். இரண்டு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதன்பின், உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

அதைத்தொடர்ந்து, மகேந்திர பூபதியை, சஸ்பெண்ட் செய்து, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கலையரசன், உத்தரவு பிறப்பித்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, மேலுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, வழக்கம் போல நீதிமன்ற பணிகளை துவக்கினார். காலை, 11:15 மணிக்கு, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், விரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, மேலுார் நீதிமன்றம் சென்றனர். சஸ்பெண்ட் உத்தரவை மகேந்திர பூபதியிடம் அளித்தனர். மேலுார் நடுவராக, கூடுதல் பொறுப்பை பாரதிராஜா ஏற்றார்.
=================================================================================


நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...