bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

உன்னையே நீ அறிய

                       

 மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில்அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.
 
மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
 
மற்றவர்களின் எண்ணங்களை அறிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெற செய்வது மட்டும் தான். அதன் பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அபிப்ராயத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா? அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய சித்திரத்தை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.எப்படியும் தினந்தோறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நம்மைப்பற்றி ஒரு அபிப்ராயம் தோன்றும். அந்த அபிப்ராயங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
 
அபிப்ராயம் என்பதும் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சனங்களோ கிடையாது. அபிப்ராயங்கள் அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது. சகஜமாக பேசக்கூடியவர், கூச்ச சுபாவம் உள்ளவர், புத்திசாலியானவர், அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.
 
புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இனையவாசிகள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம். இணையவாசிகளின் அபிப்ராயம் சேர வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப்பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.
 
ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து தங்களுக்கு தோன்றும் முதல் எண்ணத்தை தெரிவிக்கலாம்.இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.
 
ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
 
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப்பற்றிய மற்றவர்களின் முதல எண்ணங்களை அறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப்பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

மூளைக் கோளாறு மாற்றும் மூலிகை.


சர்பகந்தி
 

சம்ஹிதாவில் இதனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஐரோப்பாவில் இதனுடைய பயன் 1785 ஆம் ஆண்டில்தான் தெரிய வந்தது. சர்பகந்தியின் திறன் 1946-ம் ஆண்டிற்குப் பின்னரே நவீன மருத்துவத்தில் பரவ ஆரம்பித்தது. இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம் பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. இந்தியாவில் பஞ்சாப், சிக்கிம், பூடான், அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கிறது.

சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கி வளரும். அதிக குளிரும், அதிக மழையும் இத்தாவரத்திற்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிளையாகப்பிரியும்.பதினெட்டு மாதங்கள் வளர்ந்த தாவரங்களின் வேர் மருத்துவ பயனுக்காக தோண்டி எடுக்கப்படுகிறது. புதர்செடியான சர்ப்பகந்தாவின் இலைகளும் வேரும் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

சர்பகந்தியின் மருத்துவ குணத்திற்கான அடிப்படை வேதிப்பொருள் ஒரு இன்டோல் ஆல்கலாய்டு ஆகும். இதனை ரெசர்பைன் என்றும் அழைக்கின்றனர். இத்துடன் அஜ்மலிசைன், டெசர்பிடைன், ரெஸ்சின்னமைன் மற்றும் செர்பென்டைன் ஆகியவையும் உள்ளன. இவற்றுக்கும் ரெசர்பைன் பண்புகள் உள்ள போதிலும் அதைவிட குறைவான செயலாற்றல் கொண்டவை. பக்க விளைவுகள் இல்லாத அரிய மருந்து ரெசர்பைன் ஆகும்.

நரம்பு நோய்களை குணமாக்கும்

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர்டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் மக்கட் பேறுகாலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல், ஆகியவற்றினை போக்கக் கூடியது.

வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய்,மலேரியா, மனஅழுத்தம் (ஹைப்பர்டென்சன்), இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்ற வற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

ஆப்பிரிக்க மருத்துவத்தில், மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் சிற்றினமான, Rauvolfia vomitoria எனும் தாவரம் தூக்கம் தரும் மருந்தாகவும், பால் உணர்வு தூண்டுவியாகவும், மற்றும் வலிப்பு எதிர்ப்பானாகவும் பயன்படுத்தப்பட்டது

சனி, 3 செப்டம்பர், 2011

வாக்குமூலங்கள்.


பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!' என நீள்கின்றன கண்ணீர்க் கோரிக்கைகள். கடந்த 21 வருடங்களாகக் கடிதங்கள், புத்தகங்கள் மூலமாக ஒலிக்கும் இந்தக் கதறல் யார் மனதையும் உலுக்காமல் போனதுதான் வேதனை. இவர்கள் மீதான குற்றத்துக்கு சாட்சிகள் இல்லை; ஆவணங்கள் இல்லை. 'தூக்குத் தண்டனையைச் சுமக்க வேண்டிய ஆட்கள்தான் இவர்கள்� என்பதற்கு அதிகாரி கள் காட்டும் ஒரே ஆதாரம்... இவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்தான். "செய்த தவறையும் சதிக்கான பங்களிப்பையும் அவர்களே ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படி இருக்க, வேறு சாட்சி எதற்கு?" என்கிறது அதிகாரத் தரப்பு.
                                         
மரணத்தின் நிழலில் தவிக்கும் அந்த மூவரும் இதற்குச் சொல்லும் பதில், நெஞ்சை நொறுக்குகிறது.
முதலில் பேரறிவாளன்...
"மிகக் கொடூரமான சித்ரவதைகளுக்குப் பிறகே, ஒப்புதல் வாக்குமூலத்தைத் தயாரித்தார்கள் அதிகாரிகள். 'சாதாரண விசாரணை� எனச் சொல்லி போலீஸ் அழைத்தபோது, இவ்வளவு பெரிய பிரளயத்தில் சிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. 'பெல்ட் பாம் தயாரிக்க உதவியவன் நீதானே?' என்கிற கேள்விதான் என் மேல் முதல் அடியாக விழுந்தது. 'புலிகளிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்?' எனக் கேள்விகள் நீள நீள... எனக்கு உலகமே சுற்றுவதுபோல் இருந்தது. அடி மேல் அடி. 'இல்லை' என்கிற வார்த்தையைத் தவிர, நான் எதுவும் சொல்லவில்லை. தெரிந்தால்தானே சொல்வதற்கு? ஆனாலும், புனைய வேண்டிய அனைத்தையும் புனைந்து, ஒப்புதல் வாக்குமூலமாக்கிக் கொண்டுவந்தார்கள்.
'இதில் கையெழுத்துப் போடு� என்றார்கள். நான் அறவே மறுத்தேன். அதிகாரிகளின் ஆங்காரத்தில் என் முகம் முழுக்கக் காயங்கள். அடித்த களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்கள் அதிகாரிகள். அப்போது ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்தார்.
'உன்னையப் பார்க் குறப்ப பாவமா இருக்கு தம்பி. நீ அடி வாங் குறப்ப என் மகனோட ஞாபகம்தான் வருது. ஒப்புதல் வாக்குமூலம்னு இவங்க சித்திரிச்சு இருக்கிற கதையில நீ தயங்காமல் கையெழுத்துப் போடு. ஆனா, கோர்ட்டில் 'வற்புறுத்தி வாங்கிய கையெழுத்து�னு சொல்லிடு. நீ அப்படிச் சொல்லிட்டாலே ஒப்புதல் வாக்குமூலம் உண்மை இல்லைனு கோர்ட் அறிவிச்சிடும். இப்படி அடி உதை வாங்கி சாகாதப்பா!� என்றார்.
அவருடைய கண்களில் திரண்டு இருந்த கண்ணீர்என்னை நம்பவைத்தது. 19 வயதில் எனக்கு சட்டம் குறித்து எதுவும் தெரியாது. எனக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் கிடையாது. 'இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதே தெரியாமல், இவ்வளவு சித்ரவதைகளுக்கு ஆளாகிவிட்டோமே� என மனதுக்குள் அந்த போலீஸ்காரருக்கு நன்றி சொல்லியபடியே, ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டேன். ஆனால், அதன் பிறகு எந்த கோர்ட்டுக்கும் நான் அழைக்கப்படவில்லை. என்னுடைய கையெழுத்து என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதால், பரப்பிய பழிகளை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்குச் சிரமம் இல்லாமல் போனது. என்னுடைய தூக்குக்கு நானே கையெழுத்துப் போட்ட கொடுமையை நான் யாரிடம் சொல்ல முடியும்?"
பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் மீது கொடூர சித்ரவதைகளைப் பாய்ச்சிய அதிகாரிகள், நளினி, முருகன் இருவரையும் அப்படி ஏதும் செய்யவில்லை.
                                     

"ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துபோடச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள் அதிகாரிகள். நான் மறுத்தபோது, நான் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பக்கத்தில் என் மனைவி நளினியை உட்காரவைத்தார் கள். கேட்கவே பொசுங்கவைக்கும் அபவாத அர்ச்சனைகளை நடத்தினார்கள். மிகக் கேவலமான வார்த்தைகளால் அவர்கள் நளினியைக் கேலி செய்தபோது என்னால் பொறுக்க முடியவில்லை. அசிங்கம் என்றால் அப்படி ஒரு அசிங்கம்... ஒரு வார்த்தையின் வலி எத்தகையது என்பதை அறிந்தவன் நான். என் மனைவியை நோக்கி விழுந்த வார்த்தை கள் பொறுக்காமல், அதிகாரிகள் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன்.
ஆனாலும், என் தந்தை மற்றும் ஊர் பெயரை வேண்டும் என்றே தவறாக எழுதிக் கொடுத்தேன். 'இது திட்டமிட்ட பொய்� என்பதை அப்பட்டமாகச் சொல்ல நினைத்தே, அந்தத் தவறைச் செய்தேன். ஆனால், அந்தத் தவறான விவரங்களையே என்னுடைய நிரந்த விவரமாக்கி அதிகாரிகள் சித்திரித்துவிட்டார்கள்.
என் தந்தையின் பெயர்கூடத் தவறாக இருக்கும் அந்த வாக்குமூலம், எப்படி என்னுடைய வாக்குமூலமாக இருக்கும்? என்னிடமும் நளினியிடமும் தனித்தனியே ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாகச் சொல்லும் அதிகாரிகள், இரண்டுக்கும் ஒரே நேரத்தைக் குறித்திருக்கிறார்கள். 'நேரம்தவறா கக் குறிக்கப்பட்ட வாக்குமூலம் நிச்சயம் செல்லாது� என நினைத்தேன். ஆனால், சரியில்லாமல் போனது எங்கள் நேரம் தான்!"- முருகனின் கதறல் இது.
ஒப்புதல் வாக்குமூலத்தில் எப்படி எல்லாம் குளறுபடிகளைச் செய்தார்கள் என்பதற்கு ராபர்ட் பயாஸின் கதறலே சரியான சாட்சி. "தளபதி கிட்டுவுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்து விசாரித்தார்கள். 'இல்லவே இல்லை� என்றேன். இரவு முழுக்க காட்டுமிராண்டித்தனமாக அடித்து கைகளில் விலங்கு மாட்டி, அங்கு உள்ள ஒரு இரும்பு கேட்டில் கட்டித் தொங்கவிட்டார்கள். இரவு முழுக்க அந்த கேட்டிலேயே தொங்கினேன். சுவருடன் சாய்த்து தலைகீழாக நிற்கவைத்து அடிப்பார்கள். உச்சந்தலையே தெறிப்பதுபோல் வலிக்கும். தாகத்தில் செத்துப்போய்விடலாம் எனத் தோன்றும். ஒரு நாள் அப்படித்தான் தாகத்திலேயே படுத்துக் கிடந்தேன். தரையில் தண்ணீரை ஊற்றி நக்கிக் குடிக்கச் சொன்னார்கள். அவர்கள் நினைத்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற எத்தகைய சித்ரவதையையும் செய்வார்கள்!"
கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றி இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்ட அலுவலகத்தின் பெயர் 'மல்லிகை'. மரண தண்டனையை நோக்கி மூன்று உயிர்களை அனுப்பிவைத்ததும் இதே 'மல்லிகை'தான்.


                     

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...